திருக்குறள்

1131.

காமம் உழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி.

திருக்குறள் 1131

காமம் உழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி.

பொருள்:

காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை.

மு.வரததாசனார் உரை:

காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.